15.9.11

அறிஞர் அண்ணா!!!

சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது!


அப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.


 உடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.
  




 காலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா!




நன்றி: தினமணி - சிறுவர்மணி (03.09.11)


அண்ணா ஒரு அறிஞர், சந்தேகமே இல்லை.  அவர் வழி வந்து தமிழ்நாட்டை, தமிழ் மக்களை கவர்ந்த இரு பெரும் கட்சிகள் அவரை போல் ஆர்வமோடு தமிழ் மக்களுக்கு தொண்டு செய்தால், மிக்க நன்று!!!

அண்ணா பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்க போகும் மிக்சீ, கிரெயின்டர் ,லேப்டாப் மற்றும் இதரவைக்கும் சேர்த்து வாழ்த்துகள்!!!

பி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் 'Anna' என்று தேடல் செய்தேன். 'அண்ணா ஹசாரே' படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, 'Annadurai' தேடல். அப்பொழுதும் சந்திராயன் 'அண்ணாதுரை' வந்தார். கடைசியில் பெரியாருடன் சிக்கினார் அறிஞர்!!!  







3 comments:

Bala Venkatraman said...

முன்பு அன்னா கொர்நிகூவா பற்றிய செய்தகள் வந்துகொண்டிருந்தன. இப்போது அன்னா ஹசாரே. அன்னா பற்றிய தகவல் மிகவும் குறைவாகவே இணையத்தில் உள்ளன.

Bala Venkatraman said...
This comment has been removed by a blog administrator.
Bala Venkatraman said...

முன்பு அன்னா கொர்நிகூவா பற்றிய செய்தகள் வந்துகொண்டிருந்தன. இப்போது அன்னா ஹசாரே. அன்னா பற்றிய தகவல் மிகவும் குறைவாகவே இணையத்தில் உள்ளன.