11.12.11

இடமாற்றம்

பல நாட்களாக வோர்ட்பிரஸ் சென்று என் பதிவை நடத்த வேண்டும் என ஒரு ஆசை. இப்பொழுது அதை செய்து விட்டேன். இனி இந்த எண்ணங்களும் பார்வைகளும் புதிய பரிமாணத்தில் நாற்சந்தி-யில் இருந்து மட்டுமே வெளிவரும்.

நீங்கள் இதுவரை இந்த பதிவுகளை படித்து ஆதரவு தந்து போல இனியும் தருவீர்கள் என நம்புகிறேன்.

நாற்சந்தி முகவரி = http://naarchathi.wordpress.com

தமிழ் வாழ்க! வளர்க்க!!!
ஒஜஸ்.

27.11.11

விசித்திரம்!!!


சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

ஒருவேளை நம் எண்களின் அழகை பார்த்து, சுட்டுவிட்டாங்களோ..... மன்னிப்போம் மறப்போம் - தமிழ் எண்களை அல்ல இதை திருடியவர்களை

நான் தமிழன்டா, என்று கத்த தோணுகிறது.

மேலும் படிக்க:

பட உதவி: யாரோ ஒரு ட்விட்டர் நண்பர் (மன்னிக்கவும் பெயரை மறந்துவிட்ட்டேன்). நன்றிகள்.


24.11.11

இலவசங்கள் - வைரமுத்து

இலவசத்தில் வாழப் பழகியவர்கள்
மதுரசத்தில் மூழ்கிப் போனார்கள்.

உழைத்த தலைமுறை உளுத்த தலைமுறை
ஆக்கப் பட்டு விட்டது.

துய்ப்புக் கலாசாரம் உழைக்கும் நேரத்தை
உறிஞ்சி விட்டது.

உழைக்க முடியாத ஊனமுற்றவர்களுக்கும்,
கைவிடப்பட்ட முதியவர்களுக்கும்,
அநாதைக் குழந்தைகளுக்கும்,
ஆதரவற்ற நோயாளிகளுக்கும் தானே
இலவசம் பொருந்தும் ?

உற்பத்தி பெருக்காத இலவசம்
உற்பாதம் தானே விளைக்கும் ?

மதுக்கடை வாசல்களில் -
தவணை முறையில் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்
நம் விவசாயத் தொழிலாளிகள்.

மது என்பது உலகக் கலாசாரம் தான்.
ஒழிக்க முடியாது தான்;
மனித சமுதாயத்தின் பழம் பானம் தான்.

ஆனால் -
அருந்துபவனுக்கும் -
அருந்தப்படுவதற்குமான இடைவெளியில்
இருக்கிறது மதுவின் நன்மை – தீமை.
பெரும்பாலும் -
மேட்டுக்குடி மக்கள் மதுவை அருந்துகிறார்கள்.
ஆனால் உழைக்கும் மக்களை – மது அருந்துகிறது.

மேல் தட்டு மக்களின் உபரிப் பணத்தில்
கை வைக்கும் மது -
அடித்தட்டு மக்களின் -
உணவுப் பழக்கத்திலேயே கை வைக்கிறது.

தங்களுக்கு எதிராய் இந்தியர்கள்
கத்தி ஏந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான்
கள்ளுக்கடை திறந்தார்கள் வெள்ளையர்கள்.

புட்டிக்குள் அடக்கி வைத்திருந்தார்கள் -
தங்களுக்கு எதிரான பூதத்தை.
ஜனநாயக நாட்டில் -
பூதம் மட்டும் இன்னும் புட்டிக்குள்ளேயே
இருக்கிறது.

நன்றி : வைரமுத்து

21.11.11

௩(3) முடிச்சுக்கு.....

௩(3) முடிச்சுக்கு முன்
காதல் கனிந்த இரண்டு உயிர், ஓர் உடல் கொண்ட காதலர்களின் கல்லியாணத்தைப் பற்றிய பிதற்றல்கள் இங்கு.

ஆண் - அப்பாடா. இதற்கு மேலும் பொறுக்க முடியாது.
பெண் - நீ என்னை விட்டு பிரியப் போகிறாயா?
ஆண் - இல்லை. அதை பற்றி சிந்தனையே இல்லை
பெண் - நீ என்னை காதலிக்கிறாயா
ஆண் - கண்டிப்பாக,முப்பொழுதும்!!!
பெண் - இதுவரை நீ என்னை ஏமாற்றி உள்ளாயா?
ஆண் - இல்லை.நீ இதை கேட்க தான் வேண்டுமா?
பெண் - நீ எனக்கு முத்தம் தருவாயா....
ஆண் - சந்தர்ப்பம் கிடைக்கும் போழுதெல்லாம்....
பெண் - நீ என்னை அடிப்பாயா?
ஆண் - ஐஐயோ இல்லை! உனக்கு என்ன பைத்தியமா...
பெண் - நான் உன்னை நம்பலாமா?
ஆண் - எஸ்.
பெண் - என்னவனே என் இனியவனே ........

௩(3) முடிச்சுக்கு பின்
மேல் உள்ளதை தலைகீழாக (கடைசி ஆரம்பித்து முதல் வரை) படிக்கவும்.

பி.கு- சிரிக்க மட்டும். இது நம் நாட்டிற்கு பொருந்தாது, என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இருந்தாலும் நாம் சின்னதிரை சீரியல்களில் வருவன போல உள்ளது. பயப்பட வேண்டம், இது சொந்த சரக்கு அல்ல: சுட்டதுதான்.

12.11.11

இனியும் காதல் தேவையா?


இளைஞர்கள் அவர்களுக்கு காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டுவிடுவார்கள்.

v பொய் சொல்வதை 90% குறைக்கலாம்
v நமது நேரம் மீதமாகும்.
v நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
v மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட தேவையில்லை
v எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
v எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.
v நாள்ளிரவில் எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.
v நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்
v எல்லா பெண்கள்கலோடும் கதை அளக்கலாம், பழகலாம்.
v உங்கள் செல்பேசி பில் கூடி, தொடர்பு துண்டிக்கப்படாது.
v இங்கே வா, அங்கே வா என்ற தொல்லை இருக்காது.
v அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்து இல்லை)
v பணம் மிச்சமாகும்.
v தேவதாஸாக வாப்புக்கள் கம்மி.
v வேலையை சிரத்தையுடன் செய்யலாம்
v நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்
v காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்
v பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம்
v இஷ்டம் போல ஆடலாம்

பி.கு: எனக்கு ஒரு அழகான அட்டகாசமான காதலி இருக்கிறாள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

நன்றி: ஒரு பத்து மட்டும் சுட்டது. மீதம் அனுபவித்த சொந்த சரக்கு.

6.11.11

இருக்கா இல்லையா...


கண்ணா தப்ப தட்டி கேக்க ஆசையா?????????

உங்க ஊரு நியாய விலை கடை , அதான் பா "ரேஷன் கடை" ல இருக்க அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா?..

அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.


உங்க மொபைல் ல இருந்து
[PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்]
//உதாரணத்துக்கு PDS 10 AA001
(இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்)
அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450
இந்த ரெண்டு நம்பர் ல எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க.
உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.

#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..

அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..

மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பாருங்க..
http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70

நன்றி: VEERA RAJ

எச்சரிக்கை : நான் இன்னும் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கவில்லை. ஒரு வேலை இது ஏட்டு சுரக்காயாக கூட இருக்கலாம்.

29.10.11

தமிழ் வாழ்கிறது!!! வளருகிறது!!!

தமிழ் எண் குறிகள் பற்றி என்  அன்பு தோழன் தமிழரசு எழுதிய ஒரு பதிவை படித்தேன். பழங்காலத்து தமிழர்களின் படைப்புகள் அவை. இது போன்ற சிலவற்றை என் தாத்தா சொல்ல கேட்டுள்ளேன். ஒவ்வரு எண்ணுக்கும் ஒரு சொல். சிலவை அழகாகவும் புதுமையாகவும் உள்ளன.

இந்த அளவு சிறிய (அதாவது 1/320, 1/160...) எண்களை கொண்டு வணிகம் நடந்துள்ளது. ஒரு ருபாய்க்கு 100 பைசா என்று நமக்கு தெளிவாக தெரியும். அது போல இந்த எண்களை பயன்ப்படுத்துவது சிரமம். இதை வைத்து தமிழர்கள் மூளைகாரர்கள் என்று கூறலாம். இது நிற்க.

இந்த எழுத்துகள் வழக்கொழிந்து இந்த கால கட்டத்தில், ஒரு நாடு மட்டும் தனது ரூபாய் நோட்டில் இந்த தமிழ் எண்களை சரிவர பயன்ப்படுத்துகிறது. ரொம்ப யோசிக்காதீர்கள். அந்த நன்நாடு மொரீஷியஸ். நியுதம்(லட்சம்) பேர் கொண்ட ஒரு அழகான குட்டி தீவு.

சரி. நான் சொல்வதற்கு ஆதாரமும் தருகிறேன்.
  (நோட்டின் கீழ் பகுதியில் ,வலது மூலையை பார்க்கவும்.)


 


அனைத்து தமிழ் எண்களும் சரிவர உள்ளன. சந்தேகம் இருந்தால் மீண்டும் இங்கு செல்க. என்ன சரியாக உள்ளதா?

அந்த நாட்டு அரசாங்கத்துக்கு என் பாராட்டுகள். இதை மேலும் தொடர்வார்கள் என நம்புகிறேன். நம் தமிழர் மறந்ததை இன்னும் பலர் மறக்கவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்து இன்னும் தமிழனாய் இருந்து தமிழை சுவாசிப்பதில் மீண்டும் மீண்டும் கர்வம் கொள்கிறேன்.

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு 
முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி".


பி.கு: மேலும் அனைத்து நோட்டுகளையும் பார்வையிட.

15.10.11

யம தர்பார்...


உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா........ ~இல்லையா. ஐஐயோ இதை சீக்கிரம் படியுங்கள். ~ஆகிவிட்டதா. உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, மேலே வாசுயுங்கள். ~இரண்டாம் கலியாணமா, மாட்டிகொண்டீங்கள், உங்களுக்கு அதிர்ச்சி மட்டும் மிச்சம்.

(இதை எல்லாம் சொல்ல உனக்கு என்ன தகுதியுள்ளது என்று கேட்காதீர்கள். என் நாயகன் கல்கி சொல்லியதை தான் சொல்கிறேன். இது நிற்க.)    

மூன்று மனிதர்களுடைய ஆவி ஒரே சமயத்தில் யமனுடைய சந்நிதானத்தை அடைந்தன.



முதல் ஆவி பூலோகத்தில் பிரம்மசாரியாகவே இருந்து இறந்தவனுடையது. அவனைப் பற்றி விவரம் சித்திர குப்தன் அறிவித்ததும், யமன் இவன் பூலோகத்தில் கஷ்டமே அனுபவியாதவன்; ஆகையால் இவனை இங்கே நரகத்தில் போடு என்றான்.

அடுத்த ஆவி ஒரு கிரஹச்தனுடையது. ஐயோ பாவம்!!! உலகத்தில் கலியாணம் செய்து கொண்டு வெகு கஷ்டப்பட்டிருக்கிறான். இங்கேயாவது சுகமாக இருக்கட்டும், சொர்கத்துக்கு அனுப்பு என்றான் யமன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாவது ஆவி, யமதர்ம ராஜனே! நான் பூலோகத்தில் இரண்டு தடவை கலியாணம் செய்துகொண்டு ரொம்ப கஷ்டம் அனுபவித்தவன் என்று முறையிட்டான். உடனே யமன் வெகு கோபத்துடன், அடே முட்டாள்! ஒரு தடவை கலியாணம் செய்துகொண்டு கஷ்டப்பட்ட பின், இரண்டாம் தடவையும் கலியாணம் செய்து கொண்டாயா? இப்படிப்பட்ட மூடனுக்குச் சொர்க்கத்தில் இடம் எது? போடு இவனைக் கொடிய நரகத்தில்! என்று கட்டளையிட்டான்.

(யமனோடு சந்திப்பு எங்கு வரும், எப்படி வரும், எப்பொழுது வரும், எப்படி இருக்கும் என்பதை எம்பெருமான்தான் அறிவான். அதை எல்லாம் சற்றே  மறந்து சிரியுங்கள் J)

நன்றி: கல்கியின் கட்டுரை கலியாணாம்

("அட பாவி!!! உனக்கு சொந்தமாக கதை, கட்டுரை, கவிதை, பதிவு  எழுதவராதா...... நீ ஒரு பேத்தல். உன் கிறுக்கல்கள் தாங்க முடிலய." என்ன செய்வது மஹாஜனங்களே : முற்றிய கலி காலம்)

14.10.11

காதல்


காதல் என்றால் என்ன?

அதை பற்றி சொல்ல எனக்கு அனுபவம் பத்தாது (ஏனெனில் இப்போது தான் என்னவளை சந்தித்துள்ளேன்!!!). நமக்கு எதையுமே பிறர் விளங்க சொல்லி கேட்பதே வழக்கம்.இந்த முறை அந்த வாய்ப்பை தட்டி செல்பவர் வ.வெ.சு.ஜயர்.(போதும் பேத்தல், கேட்கிறது). இப்பொழுது சமத்தாக , காதல் பாடம் கேளுங்கள்

கண் எல்லோரையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளையெல்லாம் கேட்கிறது; வாய் காரியம் இருக்கிறதோ இல்லையோ பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும்போது, மற்ற யாரைப் பார்க்கும்போது அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமானிய விஷையமானாலும், அவருடைய குரலில் வீசேஷமான இனிமை இராவிட்டாலும், அவருடைய வார்த்தயைக் காது தேவாமிரிதத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரடத்தில் பேசும்போது வாய் குளருகிறது.; நாக்குக் கெஞ்சுகிறது; இதெல்லாம் காதலின் அடையாளம். ஆனால் இக் காதல் எப்படிப் பிறக்கிறது என்றாலோ, அது தேவ ரகசியம் மனிதரால் சொல்ல முடியாது!!!

உங்களுக்கும் இது போல காதலின் அடையாளம் அல்லது காதலை பற்றி சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். இளைஞர்களுக்கு முன்னுரிமை. (போய் பொழப்ப பாருங்க தம்பி!!!). நல்ல கருத்துகள் பதிவாக்கப்படும்.(ஹ ஹ ஹா!)          

நன்றி: கல்கியின் கட்டுரை கலியாணம்.  

13.10.11

இரவை ‘நைட்’ என்றாய்!

உணர்ச்சிகளை ஒருங்கே அள்ளிக்குவித்து,ஒவ்வொருவனையும் விளிப்படையச்செய்யும் வீர வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் காசிஆனந்தன். அவரது கவி வரிகளால் உணர்வு
பெறாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அப்படியிருந்தால் அவன் உணர்வற்றவனாகவே
இருப்பான்.

எம் இன் தமிழுக்குள் மாற்றான் மொழி புகுந்து ஆட்டுவிக்கிறது.தமிழை பேச
வெட்கப்படும் தமிழனும் இருக்கத்தான் செய்கிறான் எம்முள், ஆனாலும் எம் உணர்ச்சிக் கவிஞரின் "தமிழா நீ பேசுவது தமிழா?" என்ற கவி வரிகள் அவனை வெட்கித்தலை குனிய வைக்கும் என்பது திண்ணம். எல்லா மொழியையும் பேசுவோம் ! தமிழ் மொழியை கலப்பில்லாமல் பேசுவோம்.இதோ என்னை உலுப்பிய வீர வரிகள்.

தமிழா!
நீ
பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்
‘மம்மி’ என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை
‘பேபி’ என்றழைத்தாய்…
என்னடா, தந்தையை
‘டாடி’ என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்…

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை ‘லவ்’ என்றாய்
உதவாத சேர்க்கை…
‘ஒய்ப்’ என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை…
இரவை ‘நைட்’ என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய்
அறுத்தெறி நாக்கை…

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
‘லெப்ட்டா? ரைட்டா?’
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி ‘பைட்டா?’
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் ‘லேட்டா?’
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
‘பிரண்டு’ என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
‘சார்’ என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
‘வாக்கிங் ஸ்டிக்கா’
பாட்டி உதட்டுல
என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
வீட்டில பெண்ணின்
தலையில் ‘ரிப்பனா?’
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

நன்றி: நல்லறம்!-Wordpress Blog

10.10.11

#GreenLies #2


முதல் பதிவில் உங்களிடம் இருந்த வரவேற்ப்பை முன்னிட்டு , இந்த பொய்களின் தொகுப்பு தொடர்கிறது. தீட்டியவர்களுக்கு நன்றி!!!
இன்னும் #GreenLies இருந்தால் கமெண்டாக எழுதுங்கள்



8.10.11

#GreenLies


சிரிக்க சந்திக்க!!!

#GreenLies (பச்சை புளுகுகள்). ஒரு மணி நேரத்தில் தமிழர்களால் ட்வீட்டரில் ட்ரெண்ட (Trend) செய்யப்பட்ட வஸ்து . ஆச்சரியம் என்னவென்றால் இது நம்பர் ஒன் ட்ரெண்டிங். எனவே இதை மறக்காமல் இருப்பதற்கு ஒரு பதிவு!!!

அப்பப்பா எத்தனை வகையான பொய்கள். இதில் சிறப்பு அம்சம் , நாம் இது அனைத்தையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த பொய்களை சில பிரிவுகளாக பிரிக்கலாம். எனக்கு தெரிந்தவைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் அது பெரிய பட்டிலாயகயுள்ளது (#GreenLies #சோம்பல்). இதை தலைப்பாக கொண்டு ஒரு பி.கெஷ்.டீ பண்ணலாம் என்றால் பார்த்துக்கோங்களேன்.

நான் ட்வீட்ரில்லிருந்து சில சாம்பிள்களை மட்டும் தருகிறேன். வாசியுங்கள். சிந்தியுங்கள். சேருங்கள் ( இன்னும் நல்ல பொய்களை கமென்டாக எழுதுங்கள், இல்லை மின்னஞ்சல் செய்யுங்கள்!!!. )
--------------------------------------------------------------------------------------------

Democracy for the people . by the people, of the people #GreenLies

ஆபிஸ்ல ரொம்ப வேலை!! #GreenLies

நான் அப்பவே அவங்கிட்ட வேண்டாம்னு சொன்னேங்க... அவன்தான் கேக்கல... #GreenLies

மாப்ள மொபைலில் சார்ஜ் இல்லைடா அப்பறமா கூப்பிடுறேன் #GreenLies

தேதி கிழிக்கிறப்போவே முடிவு பண்ணிடுவேன். இன்னிக்கு எதாச்சும் உருப்படியா கிழிக்கணும்னு.. #GreenLies

பிட்டா? அப்படினா?! #GreenLies

எங்க பிரச்சனை நடந்தாலும் தேடி வந்து வேடிக்கை பார்க்கவே மாட்டார் :-) #GreenLies

இந்த டபுள் மீனிங் டுவீட்டுகளே எனக்கு புடிக்காதுப்பா! #GreenLies

My semester exam answer sheet #GreenLies

என் வாழ்க்கைல வந்த முதல் பெண் நீ தான்!! #GreenLies

மச்சி அவ உன்னயே பாத்துட்டு இருக்காடா... #GreenLies

இல்ல மச்சி!அவதாண்டா என்னயே பார்த்துகிட்டே இருக்கா!#GreenLies

இப்பலாம் facebook பக்கம் போரதே இல்ல மச்சி. எப்ப பாத்தாலும் பத்து friend request, இல்லனா chatல மொக்க போடுரானூங்க. #GreenLies

Am using online tools like twitter to be productive #GreenLies

சொல்லுடா செல்லம் அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்! #GreenLies

நேத்து கால் பண்ணினேன் மச்சி... உன் லைன் பிஸியாவே இருந்துச்சு... நெட்வொர்க் பிரப்ளம்ன்னு நினைக்கிறேன் #GreenLies

சைலண்ட்ல போட்டுருந்தனா! கவனிக்கல! இப்பதான் பாத்தேன் 3 மிஸ்ஸுடு காலு! சாரி மச்சி #GreenLies

நல்லா தான் படிச்சேன், கேள்வியை பார்த்தவுடன் எல்லாம் மறந்து போச்சு. # GreenLies

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க # GreenLies

எங்கம்மா கூட இந்த அளவுக்கு சமைச்சதில்லடி செல்லம் #GreenLies

Assignemnt-டை மறந்து வீட்லே/ஹாஸ்டல்ல வச்சிட்டு வந்துட்டேன் #GreenLies


நான் கண்டிப்பா நல்லா படிச்சு, அடுத்த செமஸ்டர்ல நல்ல மார்க் வாங்குவேன் #GreenLies

உன் முத்தம் தான் எனக்கு முதல் முத்தம் #GreenLies

நான் இனிமேல் மொக்கை போட மாட்டேன்!!! #GreenLies

என் காதலி தான் உலகத்திலேயே அழகான பெண் #GreenLies

we are just friends #GreenLies 

என்னோட வெற்றிக்கு காரணம் என் மனைவிதான் #GreenLies

தரகர்: பொண்ணு பார்க்க மகாலட்சுமியாட்டம் இருப்பா #GreenLies 

As i am suffering from fever i am not attending SCHOOL Today #GreenLies

அடுத்த செமெஸ்டர்ல கிளியர் பண்ணிடுவேன்! #GreenLies 

ஹலோ ஹலோ சிக்னல் சரியா கடைக்கலயே........ நான் அப்புரம் PHONE பண்ணறேன்!!! #GreenLies

நான் பிஸியா இருக்கும்போது இந்தமாதிரி நல்ல ட்ரெண்ட ஆரம்பிக்கிறது கொடுமை! #GreenLies

என் மாமியார் எனக்கு அம்மா மாதிரி #GreenLies

எனக்கு கோவமே வராது #GreenLies

என் சமையல்னா எங்க வீட்டில் எல்லாருக்கும் உயிர்#GreenLies

நான் கிழிச்ச கோட்டை என் பொண்ணு தாண்டவே மாட்டா #GreenLies

நான் dietல இருக்கேன் #GreenLies

நான் எது செஞ்சாலும் எங்க வீட்டுகாரர் கிட்ட கேட்டு தான் செய்வேன் #GreenLies

எங்க அம்மா தான் உலகத்திலேயே best , என் பொண்ணு அடிகடி சொல்லும் #GreenLies

****நான் இந்த ட்வீட்யுடன் ட்வீட் செய்வதை நிறுத்த போகிறேன் #GreenLies

**** அட பாவிங்களா எல்லாரும் இப்படி பொய் பொய்யா சொல்றீங்களே நான் பொய்யே சொல்ல மாட்டேன்பா ! #GreenLies


****ரொம்ப பொய் சொல்ல முடியல!!! NEXT REST!!! விடைபெருகிறேன்!!! #GreenLies
--------------------------------------------------------------------------------------------

உனக்கு எதற்கு இந்த தொகுப்பாசிரியர் (கொஞ்சம் ஓவர் இல்லை) வேலை என்று நீங்கள் கேட்ப்பது என் காதில் விழுகிறது. 
காரணங்கள்:
1. எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்.
2. விடுமுறை முன்னிட்டு பல நண்பர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் பாவம். அவர்களும் இதை படித்து ரசிக்க. (ரொம்ப அக்கரை பாரு) 
3.பதிவு எழுதி பல நாட்கள் ஆகி விட்டது.
4.மொக்கை போடுவது. (Y Blood, Same Blood)
5.ப்ளாகுக்கு பாலோவர்ஸ் சேர்ப்பதற்கு
6.நானும் கிறுக்குகவேன் என்று காட்டுவதற்கு.
7.ஏதோ எழுதணும்னு தோணிச்சு.
(போதும் டா நிறுத்து!!!!)
மற்றும் பல : etc. (அப்படினா..........)  

எனது கருத்து: ட்வீட்டர் சர்ச்சில் "GreenLies" தேடினேன்!!! அனைத்தும் தமிழ்தான்!!! நல்லா பொய் சொல்லறாங்கபா தமிழர்கள்!!! #என்னையும்_சேர்த்து  


எச்சரிக்கை: இந்த ட்வீட்ஸ் அனைத்தும் நான் எழுதியது அல்ல (இது எங்களுக்கு முன்னாடியே தெரியாது பாரு!!!). இதை தீட்டியவர்களுக்கு நன்றி!!! குறிப்பாக நன்றி சொல்லாதற்கு மன்னிக்கவும்!!! 

இன்னும் நண்பர்களின் உதவியுடன் பல பொய்கள சேர்ந்தால், அடுத்த பதிவு வரும் (இத்து நிச்சியம் நடக்கும்)!!!!

(சரி சரி அழுவதை நிறுத்தங்கள்).




29.9.11

புதிய எழுத்தாளர்களுக்கு........


புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள் - சுஜாதா



 


1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். 'துருவனும் குகனும்' என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, 'போலீஸ் செய்தி'க்கு அனுப்பாதீர்கள்.

2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். 'பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்' என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி...

4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். 'உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.' என்று சொல்வதை விட 'துப்பினான்' என்பது மேல்.

6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். 'அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்... இத்தியாத்திக்குப் பதிலாக, 'அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட 'போனான்' என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக 'னான்' என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

9. இரண்டு பக்கமும் நெருக்கமாக எழுதாதீர்கள். நிறைய இடம் விட்டுப் பளிச்சென்று நல்ல பேப்பரில் எழுதுங்கள். முதல் பக்கத்தை மட்டும் மூன்று நான்கு பிரதிகள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பி வந்தால் உடனே மற்றப் பத்திரிக்கைக்கு அனுப்ப செளகரியம்.

10. பத்திரிக்கை ஆபீசுக்கு நேராகப் போய்க் கதை கொடுக்காதீர்கள். அங்கே கிடக்கும் கதைக் குப்பைகளைப் பார்த்தால் ரொம்பச் சோர்வாக இருக்கும்.

11. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

(தோரணத்து மாவிலைகள் - சுஜாதா)

15.9.11

அறிஞர் அண்ணா!!!

சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையத்துக்கு உலகில் எங்கு, எப்புத்தகம் அச்சிடப்பட்டாலும் ஒரு புத்தகம் உடனடியாக வந்துவிடும் காலம் அது!


அப்போது பாரதப் பிரதமராக இருந்த நேருவுக்கு ஓர் முக்கியமான புத்தகம் தேவைப்பட்டது. தனது செயலாளரிடம், அந்தப் புத்தகத்தைக் கன்னிமாரா நூல் நிலையத்திலிருந்து பெற்றுத் தரும்படி கூறினார். அவர் போன் போட்டுக் கேட்டும் புத்தகம் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று பதில் வந்தது.


 உடனே, அப்புத்தகத்தை எடுத்தச் சென்றது யார் என்று வினவினார்கள்.
  




 காலை 10 மணிக்குத்தான் அந்தப் புத்தகம் நூல் நிலையத்துக்கே வந்தததாம். 10.01-க்கு அண்ணாதுரை என்பவர் அதை எடுத்துச் சென்றுவிட்டார் என்ற பதிலைக் கேட்டு நேரு ஆச்சரியப்பட்டுப் போனார். நூலகத்துக்கு வந்த ஒரு நிமிடத்தில் புத்தகத்தை எடுத்துச் சென்றவர் அறிஞர் அண்ணாதான். படிப்பதில் அவ்வளவு ஆர்வம் மிக்கவர் அண்ணா!




நன்றி: தினமணி - சிறுவர்மணி (03.09.11)


அண்ணா ஒரு அறிஞர், சந்தேகமே இல்லை.  அவர் வழி வந்து தமிழ்நாட்டை, தமிழ் மக்களை கவர்ந்த இரு பெரும் கட்சிகள் அவரை போல் ஆர்வமோடு தமிழ் மக்களுக்கு தொண்டு செய்தால், மிக்க நன்று!!!

அண்ணா பிறந்தநாள் நல் வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்க போகும் மிக்சீ, கிரெயின்டர் ,லேப்டாப் மற்றும் இதரவைக்கும் சேர்த்து வாழ்த்துகள்!!!

பி.கு: அண்ணா படங்களுக்காக கூகிள் 'Anna' என்று தேடல் செய்தேன். 'அண்ணா ஹசாரே' படங்கங்களாக வந்து நின்றது. சரி பரவால்லை என்று, 'Annadurai' தேடல். அப்பொழுதும் சந்திராயன் 'அண்ணாதுரை' வந்தார். கடைசியில் பெரியாருடன் சிக்கினார் அறிஞர்!!!  







5.9.11

குருவின்றி அமையாது உலகு!

குரு என்ற சொல்லை உலகுக்கு அளித்தது இந்தியாதான். இப்போது உலக மொழிகளில் எல்லாம் ஆசான், முன்னோடி ஆகிய பொருள்படும்படி இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது

முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். மாணவர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக வகுப்பு ஆசிரியர்களுக்கு மலர்க்கொத்து கொடுப்பதும், இனிப்பு வழங்குவதும், சில இடங்களில் பாராட்டு விழாக்களுமாக நடைபெறும் இந்த வேளையில், இன்றைய நவீன காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் என்பவரை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். ஆனால், இன்று எல்லா வீடுகளிலும் ஆண்களும் பெண்களும் படித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லும் முன்பாகவே எழுத்துகளை, ஆங்கிலம், தமிழ் என அறிமுகம் செய்கிறார்கள். பொம்மைகளை, படங்களைக் கொடுத்துக் கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் வீட்டுப் பாடங்களைக்கூட சொல்லித் தருவதும், தானே போட்டுத் தருவதுமான வேலைகளையும் செய்யும் பெற்றோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. அவர்களே குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகிவிடுகிறார்கள். இதனாலேயே பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரிகளாக, எதிர் ஆளுமைகளாக மாறிப்போகிறார்கள்.

இன்றைய நவீன தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ச்சி எல்லாமும் இப்போது தாய், தந்தை, ஆசிரியர் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பாடம் முழுவதையும் சொல்லித்தர குறுந்தகடுகள் வந்தாகிவிட்டன. வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் அதே பாடங்களை அப்படியே நடத்தும் அளவுக்கு இதன் தரம் இருக்கிறது. மேலும் ஒரு வகுப்பறையில் இருந்துகொண்டு, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் வகையில் கணினியுடன் கூடிய வகுப்பறைகள் இன்று அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. அப்படியானால் யாரை ஆசிரியர் யாரை நல்லாசிரியர் எனக்கொள்வது?

ஒரு மாணவர் பள்ளியை விட்டு வெளியே சென்று சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை ஆசிரியர்களின் பெயரை நன்றியுடன் நினைவுகூர்கின்றாரோ, எத்தனை பேரை அவர் திசை நோக்கி வணங்க நினைக்கின்றாரோ, தன் குழந்தைகளை ஒரு பள்ளியில் கொண்டு சேர்க்கும்போது தனக்கு வாய்த்த ஆசிரியர் போல தன் மகன், மகளுக்கும் கிடைக்கமாட்டாரா என்று எந்த ஆசிரியரை நினைத்து மனம் ஏங்குகின்றதோ அவர்கள் மட்டுமே நல்லாசிரியர்கள் என்று ஒரு பட்டியலைப் போட முடியும். இந்த அளவுகோலில் வருவோர் மட்டுமே நிஜமான, நிச்சயமான நல்லாசிரியர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் நிச்சயமாக மத்திய, மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்களைப் போன்றவர்களால்தான் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையும் நன்றி சொல்லிக்கொண்டு முன்னேறிச் செல்கிறது.

இந்தவிதமான ஆசிரியர்களை ஒரு மனிதன் பின்னாளில் நினைக்கக் காரணம் என்ன என்பதை எண்ணிப் பார்க்கும்போது, ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவரா அல்லது அவரது வகுப்பு வந்தாலே பயங்கர ஜாலி என்பதாலா அல்லது அவர் அன்பாகப் பழகினாரா, எதனால் அவரை மனம் தேடுகிறது?

அறிவை வழங்கும் ஆசிரியர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களில் இருக்கும் பாடத்தைத் திரும்பவும் அதே அளவில், அதே தரத்தில் மாற்றமின்றி மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். அறிவைப்புகட்டுபவரின் பணி இன்னும் சுவையானதாக , பிடிக்காத உணவையும் ஊட்டி விடும் சாமர்த்தியம் கொண்டதாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது வகை ஆசிரியர்கள் ஒரு மாணவரின் உள்ளே இருக்கும் திறமையை அவரே பார்க்கும்படியாகத் துலக்கி, பளபளப்பாக்கி விடுவார். அந்தத் தன்னொளி வழியில் அந்த மாணவர் நடந்து வாழ்க்கையில் பலபடி மேலே செல்வார். அப்படியாக ஒவ்வொருவரும் தனது அறிவின் ஒளியைத் துலக்கிக் காட்டியவர்களை எண்ணிப் பார்க்கிறார்கள். இது பள்ளி வகுப்பறையில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. இவர்கள்தான் உண்மையிலேயே குரு. ஒரு மனிதனை அவருக்கே அடையாளம் காட்டுவதுதான் குருவின் பணியாக இருக்கிறது.

இத்தகைய ஆசான்கள்தான் ஒரு மனிதன் தன் தாய் தந்தையை மதித்துக் காப்பாற்ற வேண்டும் என்பதும், சமூகத்தில் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் அறவாழ்வு வாழ்வதும், அனைவரையும் அன்பு செய்வதும் நமக்கு உள்ளே எப்போதுமே இருந்து வருகின்ற ஒளி என்பதை, அறிவைத் துலக்கி வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள் .

இவர்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது!

நன்றி: தினமணி-தலையங்கம்-05.09.11


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------


அனைவருக்கும் ஆசானாக விளங்கும்  இறைவனுக்கு நன்றி..
மழலைப் பருவம் முதல் என்னை செதுக்கி வரும் என் தாய், தந்தை மற்றும் ஐயா(தாத்தா) ஆகிய ஆசிரியர்களுக்கு நன்றி.

எனக்கு பாடம் சொல்லி தந்து, வளர்த்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என் அப்பா(எல்லா பாடங்கள்), லக்ஷ்மி மிஸ் (கணக்கு),நித்யா மிஸ் (சமூக அறிவியல்),தமிழ்ச்செல்வி மிஸ்(கணக்கு), செந்தில்நாதன் சார்(கணக்கு), சலிலா மிஸ்(சமூக அறிவியல்), வள்ளிக்கண்ணு மிஸ் (தமிழ்), லக்ஷ்மி ஆச்சி (கணக்கு), செல்வ நம்பி சார்(கணக்கு), கீதா மிஸ்(கணக்கு) மற்றும் மதுரை ராமமூர்த்தி ஐயா, ராமானுஜம் சார், பாலா சார் , கமல் அண்ணா முதலியோருக்கு என் அன்பு கலந்த வணக்கங்கள்.


எழுத்துலக ஜாம்பவான்கள் சிலரை நான் வணங்குகிறேன். என்னையும் என் சிந்தனயையும் செதுக்கிய எழுத்தாசிரியர்களான 'கல்கி' மற்றும் 'தேவன்' ஆகியோருக்கு என் நன்றிகள்!!! இவர்களால் நான் உலகை மறந்து விடுகிறேன், பல சமயங்களில்!!!


ஆசிரியர் பணி, அறப் பணி!!!


1.9.11

விநாயகர் சதுர்த்தி!!!




அப்பா ,பிள்ளையார் அப்பா: பக்தி கொடு, ஞாநம் கொடு,        வைராகியம் கொடு!!!  


வினைகளை தீர்க்கும் வினாயகா உன்னை வணங்குகிறேன்!!!


செட்டிநாட்டுக்கு சொந்தமான கற்பக விரிக்க்ஷமே: கற்பக கடவுளே உன்னை வாழ்த்துகிறேன்!!!


மாஹாபாரதம் எழுதியவனே உன்னை போற்றுகிறேன், அருணகிரிநாதரின் கவிதையால்

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணிக்

காற்றிடு மடியவர் புத்தியி லுரைபவர்
கற்பக மெனவினை - கடிதேகும்

..................................................................
.........................................................

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முதல்வோனே!





நர்தனமாடும் நாமசிவாயத்தின் மகனே: நன்மைகளை அருள்வாய்!!!



இன்றோ விடுமுறை : அவல், பொரி, மோதகம் என பலவற்றை உனக்கு தந்து அதை பிரசாதமாக உண்டு மகிழ்கிறேன்!!!


இவரை மறந்த விட கூடாது. செல்வ விநாயகர். எங்கள் வீட்டின் நாயகர். கூடவே உள்ளார் எங்கள் சின்ன வீர விநாயகர்!!!


உன்னை வாழ்த்தி வேண்டி வணங்கி நிற்கிறேன்!!! அருள் செய்!!!