12.11.11

இனியும் காதல் தேவையா?


இளைஞர்கள் அவர்களுக்கு காதலி இல்லை என்று ஏங்குகின்றனர். ஆனால், காதல் இல்லாமல் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் இவர்கள் தங்களது ஆசையை விட்டுவிடுவார்கள்.

v பொய் சொல்வதை 90% குறைக்கலாம்
v நமது நேரம் மீதமாகும்.
v நன்றாக இரவில் நித்திரை கொள்ளலாம்.
v மிஸ்ட் கால் வந்தால் அதை பற்றிக் கவலை பட தேவையில்லை
v எந்த ஹோட்டலிலும் சாப்பிடலாம்.
v எப்படி வேணுமானாலும் உடை உடுத்தலாம்.
v நாள்ளிரவில் எஸ்.எம்.எஸ் வந்து தூக்கம் கலையாது.
v நல்ல கனவுகளை (டூயட் இன்றி) காணலாம்
v எல்லா பெண்கள்கலோடும் கதை அளக்கலாம், பழகலாம்.
v உங்கள் செல்பேசி பில் கூடி, தொடர்பு துண்டிக்கப்படாது.
v இங்கே வா, அங்கே வா என்ற தொல்லை இருக்காது.
v அழகான காதல் கவிதை எழுதலாம் (நல்ல காதல் கவிதை எழுத்தும் பெரும்பாலானோர் காதலித்து இல்லை)
v பணம் மிச்சமாகும்.
v தேவதாஸாக வாப்புக்கள் கம்மி.
v வேலையை சிரத்தையுடன் செய்யலாம்
v நாலு நல்ல வார்த்தைகளைப் படிக்கலாம்
v காதல் காவியங்களை ரசித்து ருசித்து படிக்கலாம்
v பெற்றோர் நிம்மதிக்கு, மரியாதை கொடுக்கலாம்
v இஷ்டம் போல ஆடலாம்

பி.கு: எனக்கு ஒரு அழகான அட்டகாசமான காதலி இருக்கிறாள் என்பதை பெருமையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

நன்றி: ஒரு பத்து மட்டும் சுட்டது. மீதம் அனுபவித்த சொந்த சரக்கு.

No comments: